சஹீஹ் முஸ்லிமிலே பதிவாகி இருக்கக்கூடிய ஒரு ஹதீஸ், நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், தொழுகைக்காக வேண்டி இக்காமத் சொல்லப்பட்டுவிட்டால் ஃபர்ளான தொழுகையை தவிர வேறு தொழுகை இல்லை என்று சொன்னார்கள் [1]. இந்த ஹதீஸை ஆதாரமாக வைத்து உலமாக்கள் ஒருவர் பள்ளிவாசலுக்குள் நுழைகிற போது அல்லது நுழைந்திருக்கிற போது இக்காமத் சொல்லப்பட்டுவிட்டால் அதற்குப் பிறகு அவர் சுன்னத் தொழுகையில் ஈடுபடக்கூடாது என்ற கருத்தை ஏகமனதாக முன்வைத்திருக்கிறார்கள் [1]. நாம் வரும்போது இக்காம சொல்லப்பட்டுவிட்டால் தனியாக போய் நின்று சுன்னத் தொழுவது கூடாது, உடனடியாக ஃபர்து தொழுகைக்குள் நாம் நுழைந்து விட வேண்டும் [1]. அதே நேரத்தில் நாம் சுன்னத் தொழுகையிலே ஈடுபடுவதற்காக தக்பீர் கட்டி தொழுகையில் ஈடுபட்டு கொண்டிருக்கும் போது, இக்காமத் சொல்லப்பட்டுவிட்டால், தொழுகையை தொடர்ந்து நிறைவேற்றி சலாம் கொடுத்துவிட்டு ஃபர் தொழுகையில் நுழைந்து கொள்வதா? அல்லது தொழுகை இடையிலே விட்டுவிட்டு ஃபர் தொழுகையில் இணைந்து கொள்வதா என்பதிலே உலமாக்கள் மத்தியிலே கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன [2]. சில அறிஞர்கள் தொழுகையை விட்டுவிட்டு அவர் தொழுகையிலே போய் இணைந்து கொள்ள வேண்டும் என்கிற கருத்தை முன்வைத்திருக்கிறார்கள் [2]. இன்னும் சில அறிஞர்கள் இல்லை அவர் தொழுகையிலே நுழைந்துவிட்டார் இக்காமத் சொல்லப்படுவதற்கு முன்னால் சுன்னத்தான தொழுகையிலே நுழைந்துவிட்டார் எனவே அவர் அந்த தொழுகையை பாத்தி ஆக்காமல் முடித்துவிட்டுதான் அடுத்த தொழுகைக்கு போக வேண்டும் என்கிற இந்த இரண்டு கருத்துக்களையும் முன்வைக்கிறார்கள் [2].
இதிலே சவுதி அரேபியாவை சேர்ந்த ஷேக் முஹம்மது இப்னு சாலிஹல் உசைமீன் (ரஹ்) அவர்கள் ஒரு நடுநிலையான கருத்தை முன்வைக்கிறார்கள், அந்த கருத்து மிகவும் பொருத்தமானதாக தென்படுகிறது [2]. அதாவது அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால் இப்போது ஒருவர் வந்து சுன்னத் தொழுகைக்காக தக்பீர் கட்டி முதலாவது ரக்காத்திலே இருந்து கொண்டிருக்கும் போது இக்காமத் சொல்லப்படுகிறது என்று சொன்னால் அவர் அதையும் முடித்து அடுத்த ரக்காத்தை முடிப்பதற்குள் இங்கே ஃபர் தொழுகையிலே உள்ள இமாம் ஒரு ரக்காத்தை முடித்து விடக்கூடிய நிலை வரும் [3]. எனவே அவருக்கு அந்த தொழுகையினுடைய சிறப்பும் ஆரம்ப நிலையில் உள்ள சிறப்பும் மிஸ் ஆகிவிடும் என்கிற காரணத்தினால் இவர் தொழுகையை விட்டுவிட்டு பர்து தொழுகையிலே ஜாயின் பண்ணிக்கொள்ள வேண்டும் [3]. அதே நேரத்தில் ஒருவர் இரண்டாவது ரக்காத்தில் இறுதி நிலையிலே இருந்து கொண்டிருக்கிறார், உதாரணமாக இரண்டாவது ரக்காத்தில் சூரத்துல் பாத்திஹாவையும் ஓதி ருக்குூவுக்கு செல்லக்கூடிய நிலையில் இருக்கும்போது இக்காமத் சொல்கிறது என்றால், இவர் ருக்குூவுக்கு போய் அந்த தொழுகையை வேகமாக பூரணப்படுத்தி விட்டு அவர் ஃபர்லு தொழுகையை ஜாயின் பண்ணி கொள்வதுதான் சிறந்தது என்று ஷேக் உசைமின் (ரஹ்) அவர்கள் சொல்கிறார்கள் [3, 4]. இந்த கருத்தே இந்த இரண்டு கருத்துக்களையும் பேலன்ஸ் பண்ணக்கூடிய ஒரு நடுநிலையான கருத்தாக தெரிகிறது [4].