Dr. ஷேக் முபாரக் மதனி

அங்கவீனர்களுக்கு (மாற்றுத்திறனாளிகளுக்கு) சுவர்க்கம் நிச்சயமானதா?

அகீதா

← முந்தையஅடுதது →
கேள்வி
அங்கவீனர்களுக்கு (மாற்றுத்திறனாளிகளுக்கு) சுவர்க்கம் நிச்சயமானதா?
பதில்
பதில்:

உண்மையிலேயே அல்லாஹ் ஜல்லஷானஹுத்தஆலா இந்த உலகத்தை ஒரு சோதனைக் களமாகவே படைத்திருக்கிறான். அந்த அடிப்படையில் சிலரை அல்லாஹுத்தஆலா படைக்கும் போதே சில குறைபாடுகளோடு படைத்து சோதிக்கிறான். இந்த சோதனை, குறைபாடுகளோடு படைக்கப்பட்டவருக்கு சோதனையாக இருக்கிற அதே நேரத்தில், அவரைப் பெற்றவர்களுக்கும் சில நேரங்களில் அது சோதனையாக அமைகிறது. அதேபோன்று அவரோடு உடன் பிறந்த உறவினர்களுக்கும் அது ஒரு சோதனையாக அமைகிறது. பொதுவாக அல்லாஹுத்தஆலா சோதிக்கிற போது, யார் அந்த சோதனையை மனப்பூர்வமாக ஏற்றுப் பொறுமையை கடைபிடிக்கிறாரோ, அவருக்கு சுவர்க்கம் கிடைக்கும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

உதாரணமாக புகாரியிலே பதிவு செய்யப்பட்டிருக்கக்கூடிய ஒரு ஹதீஸுல் குத்ஸியிலே, அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்கள் அல்லாஹ் கூறியதாகத் தெரிவிக்கிறார்கள்: "என்னுடைய அடியானை அவனுடைய நேசத்திற்குரிய இரண்டைக் கொண்டும் நான் சோதிக்கிற போது, அவன் அதிலே பொறுமையாக இருப்பானாக இருந்தால், அதற்குப் பதிலாக அவனுக்கு நான் சுவர்க்கத்தை கொடுக்கிறேன்" என்று அல்லாஹ் சொல்லுகிறான். விருப்பத்திற்குரிய இரண்டு என்று அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்கள் இங்கே குறிப்பிடுவது மனிதனின் கண்களை ஆகும். ஒரு மனிதனுக்கு இரண்டு கண்களும் பார்வை இல்லாமல் போவது என்பது பொதுவாக அங்கவீனம் என்று சொல்லப்படும். இன்றைக்கு அதை மாற்றுத் திறனாளிகள் என்று அழைக்கிறார்கள். கண்பார்வை இல்லாமல் ஒருவரை அல்லாஹுத்தஆலா சோதிக்கிற போது, அதிலே அவர் பொறுமையை கடைப்பிடித்தால் அவருக்குச் சொர்க்கம் கிடைக்கும்.

இந்த அடிப்படையில், யாரையெல்லாம் அல்லாஹுத்தஆலா சில குறைபாடுகளோடு படைத்திருக்கிறானோ அவர்கள் அதிலே பொறுமையாக இருந்தால், அதேபோன்று யாரெல்லாம் அப்படிப் படைக்கப்படுவதனால் (பெற்றோர், உறவினர்கள் என) சோதிக்கப்படுகிறார்களோ அவர்களும் அதிலே பொறுமையைக் கடைபிடிப்பார்களாக இருந்தால், அதற்குப் பதிலாக அவர்களுக்கு சுவர்க்கம் கிடைக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.

வீடியோ விளக்கம்
▶ YouTube-ல் காண்க
← முந்தையஅடுதது →