Dr. ஷேக் முபாரக் மதனி

தந்தை வற்புறுத்தினால் மகன் தலாக் சொல்லலாமா?

திருமணம்

← முந்தையஅடுதது →
கேள்வி
தந்தை வற்புறுத்தினால் மகன் தலாக் சொல்லலாமா?
பதில்
பதில்:

அல்ஹம்துலில்லாஹ் ஸலாத்து ஸலாம் ரசூலில்லாம் தந்தை வற்புறுத்தினால் மகன் தலாக் சொல்ல வேண்டுமா என்ற இந்த கேள்வியை பொறுத்தவரையில் இதை நாம் இரண்டு நிலைகளில் பார்க்க வேண்டிருக்கிறது அதாவது இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தன்னுடைய மகன் இஸ்மாயில் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு யிர் அதபத்தபாபிக் என்ற வாசகத்தின் மூலம் உன்னுடைய மனைவியை நீ மாற்றிக்கொள் என்று சொன்னார்கள் அதேபோல உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய வேண்டுதலின் பெயரில் அவர்களுடைய மகன் அப்துல்லாஹ் இப்னு உமரை தலாக் சொல்லுமாறு சொன்னார்கள் [1]. இந்த இரண்டு நிகழ்வுகளையும் வைத்து ஒரு தந்தை தன்னுடைய மகனை நீ உன்னுடைய மனைவியை தலாக் சொல்ல வேண்டும் என்று சொன்னால் தலாக் சொல்ல வேண்டும் என்று சிலர் புரிகிறார்கள் இருந்தாலும் கூட இமாம் அஹ்மது இப்னு ஹம்பல் அதேபோன்று பிற்பட்ட காலத்திலே ஷேக் முஹம்மது இப்னு சாலிஹுதைமீன் ரஹிமல்லாஹ் போன்ற அறிஞர்கள் இதை ஒரு அற்புதமான முறையில் தெளிவுபடுத்துகிறார்கள் [1].

ஒரு தந்தை இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை போல உமர் இப்னுஹல்ஹத்தாப் ரலியல்லாஹு அவர்களைப் போல இருந்து மகனை தலாக் சொல்லச் சொன்னால் தலாக் சொல்லுவது பிரச்சனை இல்லை [2]. ஆனால் உண்மையிலேயே ஒரு தந்தை தன்னுடைய மகனை பார்த்து நீ தலாக் சொல்லு என்று பொதுவாக சொல்லுகிற நேரத்தில் அந்த கட்டளைக்கு நாம் கட்டுப்ப வேண்டுமா என்று கேட்டால் தந்தையினுடைய நிலையை பார்க்க வேண்டும் [2]. ஏன் தலாக் சொல்லுகிறார் என்கிற காரணத்தையும் பார்க்க வேண்டும் தந்தை ஒரு மார்க்க பற்றுள்ளவர் இறையச்சம் மிக்கவராக இருக்கிறார் [2]. தலாக் சொல்வதற்கான நியாயங்களை சொல்லுகிறார் மகனே உன்னுடைய மனைவி ஒழுக்கத்தில் நல்லவள் கிடையாது [2]. அவள் கொடுக்கல் வாங்கலில் மோசமானவளாக இருக்கிறாள் [2]. குழந்தை வளர்ப்பில் இப்படி இருக்கிறாள் [2]. என்கிற நியாயங்களை தந்தை சொல்லி தலாக் சொல்ல சொன்னால், அந்த நேரத்தில் தந்தைக்கு கட்டுப்பட வேண்டும் [2]. அது இல்லாமல் பொதுவாக காரணம் சொல்லாமல் தந்தை தலாக் சொல்லச் சொல்ல சொல்லகிற நேரத்தில் தந்தைக்கு கட்டுப்பட வேண்டுமா என்று கேட்டால் கட்டுப்பட வேண்டிய அவசியம் கிடையாது [2].

பொதுவாக பெற்றோருக்கு கட்டுப்படுவது என்பது இஸ்லாத்தில் வலியுறுத்தப்பட்ட ஒன்று அந்த கட்டுப்படுவது என்பது ரசூல்லாஹ ஸல்லம் அவர்களுடைய ஹதீஸின் மூலம் வரையறை செய்யப்படுகிறது ஹலிக் படைத்தவனுக்கு மாறு செய்கிற விஷயத்தில் படைப்புகளுக்கு கட்டுப்படக்கூடாது என்ற அந்த ஹதீஸ் எப்போதும் ஒரு மிக முக்கியமான வரையறையாக காணப்படுகிறது [3]. எனவே பொதுவாக தந்தை தலாக் சொல்லுமாறு சொன்னால் மகன் தலாக் சொல்ல வேண்டும் என்ற கருத்து தவறானதாகும் [3]. ஏற்கனவே நம்ம கூறிய அந்த அடிப்படையில் அந்த நிலைமையை அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் [3]. அல்லாஹுத்தஆலா [3].

வீடியோ விளக்கம்
▶ YouTube-ல் காண்க
← முந்தையஅடுதது →