சுன்னத் தொழுது கொண்டிருக்கும்போது ஃபர்ள் தொழுகைக்கான இகாமத் கொடுக்கப்பட்டால் நான் என்ன செய்ய வேண்டும்

📅 2023-08-19✍ Aasif
தொழுகை✍ ஸாலிஹ் இப்னு ஃபவ்ஸான்
🗂 தொழுகை
👤 ஸாலிஹ் இப்னு ஃபவ்ஸான்
கேள்வி: நான் சுன்னத் தொழுது கொண்டிருக்கும்போது ஃபர்ள் தொழுகைக்கான இகாமத் கொடுக்கப்பட்டால் நான் என்ன செய்ய வேண்டும் ? சுன்னத் தொழுகையை முறித்துவிட்டு ஜமாஅத்தில் சேர வேண்டுமா அல்லது சுன்னத் தொழுகையை பூர்த்தியாக்க வேண்டுமா ? பதில்: 🎙️ ஷைய்ஃக் ஸாலிஹ் அல்-ஃபவ்ஸான் (ஹபீதஹுல்லாஹ்) கூறிகின்றார்கள். ▪️ (கடமையான) தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டு விட்டால் அந்தக் கடமையான தொழுகை தவிர வேறு தொழுகை இல்லை’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். முஸ்லிம் :1281 ▪️ எனவே இகாமத் கொடுக்கப்பட்ட பிறகு சுன்னத் தொழுகையை தொடங்க கூடாது என்பதில் அறிஞர்கள் ஏகோபித்துள்ளனர். ▪️ ஆனால் சுன்னத் தொழுது கொண்டிருக்கும்போது இகாமத் கொடுத்தால் அத்தொழுகையை முறித்துவிட்டு ஜமாஅத்தில் சேர வேண்டும் என்று சில அறிஞர்களும், சுருக்கமாக அந்த சுன்னத் தொழுகையை தொழுதுவிட்டு இமாமுடன் ஜமாஅத்தில் சேர்ந்தால் போதும் என்றும் சில அறிஞர்களும் கூறியுள்ளனர். ▪️ எப்படியானாலும் ஒருவர் சுன்னத் தொழுகையில் இறுதியில் இருக்கிறார் என்றால் அப்போது அவர் விரைவாக தொழுகையை முடிக்க வேண்டும்.ஆனால் சுன்னத் தொழுகையின் ஆரம்பத்தில் இருப்பாராயின் அத்தொழுகையை முறித்துவிட்டு ஜமாஅத்தில் சேர வேண்டும். ▪️ இந்த கருத்து தான் சரியானதாகும். 🎙️ஷைய்ஃக் ஸாலிஹ் அல்-ஃபவ்ஸான் ஃபத்வாவிலிருந்து எடுக்கப்பட்டது… 📽️இதை அரபியில் கேட்க : மொழிபெயர்ப்பு:  السلفي -கற்கைக்கூடம்
மூலம்: https://islamqatamil.com/%e0%ae%9a%e0%af%81%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b4%e0%af%81%e0%ae%a4%e0%af%81-%e0%ae%95%e0%af%8a%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%95/
← ஃபத்வா பட்டியலுக்கு திரும்பு