காலை, மாலை துஆக்கள் (திக்ர்கள்) – தொடர் 02

📅 2023-07-06✍ Aasif
துஆ
🗂 துஆ
بسم الله الرحمن الرحيم நபி ﷺ அவர்கள்  நினைவுகூர்ந்த ஆதார பூர்வமான காலை மற்றும் மாலை நினைவு கூறல் (அத்கார்)கள். தொடர்: 02 துஆ: 05 عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَصْبَحَ قَالَ: «اللَّهُمَّ بِكَ أَصْبَحْنَا، وَبِكَ أَمْسَيْنَا، وَبِكَ نَحْيَا، وَبِكَ نَمُوتُ، وَإِلَيْكَ النُّشُورُ» ، وَإِذَا أَمْسَى قَالَ: «اللَّهُمَّ بِكَ أَمْسَيْنَا، وَبِكَ أَصْبَحْنَا، وَبِكَ نَحْيَا، وَبِكَ نَمُوتُ، وَإِلَيْكَ الْمَصِيرُ» وأخرج البخاري في الأدب المفرد (١١٩٩) وإسناده حسن ___________________ காலை நேரத்தில்: اللَّهُمَّ بِكَ أَصْبَحْنَا، وَبِكَ أَمْسَيْنَا، وَبِكَ نَحْيَا، وَبِكَ نَمُوتُ، وَإِلَيْكَ النُّشُورُ அல்லாஹும்ம பிக அஸ்பஹ்னா, வபிக அம்ஸைனா, வபிக நஹ்யா, வபிக நமூது, வஇலைகன் நுஷூர் பொருள்: அல்லாஹ்வே! உன்னைக் கொண்டே காலையை அடைந்தோம்; உன்னைக் கொண்டே நேற்றைய மாலையை அடைந்தோம்; உன்னைக் கொண்டே வாழ்கிறோம்; உன்னைக் கொண்டே மரணிப்போம்; எழுப்பப் படுதலும் உன்பக்கமே! [காலையில் ஒரு முறை] ________________ மாலை நேரத்தில்: اللَّهُمَّ بِكَ أَمْسَيْنَا، وَبِكَ أَصْبَحْنَا، وَبِكَ نَحْيَا، وَبِكَ نَمُوتُ، وَإِلَيْكَ الْمَصِيرُ அல்லாஹும்ம பிக அம்ஸைனா, வபிக அஸ்பஹ்னா, வபிக நஹ்யா, வபிக நமூது, வஇலைகள் மசீர் பொருள்: அல்லாஹ்வே! உன்னைக் கொண்டே மாலையை அடைந்தோம்; உன்னைக் கொண்டே நேற்றைய காலையை அடைந்தோம்; உன்னைக் கொண்டே வாழ்கிறோம்; உன்னைக் கொண்டே மரணிக்கிறோம்; உன்பக்கமே திரும்ப வேண்டியுள்ளது. [மாலையில் ஒரு முறை] ஆதாரம்: ஆபூ-ஹுரைரா رضي الله عنه. அவர்களின் ஹதீஸ்: ஆதாபுல் முப்ரத் என்ற நூலில் இமாம் புஹாரி ரஹிமஹுல்லாஹ் அறிவிக்கின்றார்கள். இந்த ஹதீஸ் ஹஸன் எனும் தரத்தில் உள்ளது. _____________________ துஆ: 06 ஸூரத்துல் இஃக்லாஸ் __________________________________ بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَـٰنِ ٱلرَّحِیمِ அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்) قُلۡ هُوَ ٱللَّهُ أَحَدٌ ۝ (நபியே!) நீர் கூறுவீராக அவன் “அல்லாஹ்” ஒருவனே! ٱللَّهُ ٱلصَّمَدُ ۝ அல்லாஹ் (யாவற்றைவிட்டும்) தேவையற்றவன், (யாவும் அவன் அருளையே எதிர்பார்த்திருக்கின்றன!). لَمۡ یَلِدۡ وَلَمۡ یُولَدۡ ۝ அவன் (எவரையும்) பெறவில்லை, (எவராலும்) அவன் பெறப்படவுமில்லை. وَلَمۡ یَكُن لَّهُۥ كُفُوًا أَحَدُۢ ۝ மேலும், அவனுக்கு நிகராக எவருமில்லை. ________ ஸூரத்துல் ஃபலக் __________________________________ بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَـٰنِ ٱلرَّحِیمِ அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்) قُلۡ أَعُوذُ بِرَبِّ ٱلۡفَلَقِ ۝ (நபியே! நீர் கூறுவீராக! வைகறையின் இரட்சகனிடம் நான் பாதுகாவல் தேடுகிறேன். مِن شَرِّ مَا خَلَقَ ۝ அவன் படைத்தவற்றின் தீங்கைவிட்டும், وَمِن شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ ۝ (இரவினுடைய) இருளின் தீங்கைவிட்டும் – அது பரவிவிடும்போது, وَمِن شَرِّ ٱلنَّفَّـٰثَـٰتِ فِی ٱلۡعُقَدِ ۝ மேலும், முடிச்சுகளில் (மந்திரித்து) ஊதும் பெண்களின் தீங்கைவிட்டும், وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ ۝ பொறாமைக்காரனின் தீங்கைவிட்டும் -அவன் பொறாமை கொள்ளும்போது (நான் காவல் தேடுகிறேன்). ________ ஸூரத்துந் நாஸ் __________________________________ بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَـٰنِ ٱلرَّحِیمِ அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்) قُلۡ أَعُوذُ بِرَبِّ ٱلنَّاسِ ۝ (நபியே!) நீர் கூறுவீராக! மனிதர்களின் இரட்சகனிடம் நான் பாதுகாவல் தேடுகிறேன். مَلِكِ ٱلنَّاسِ ۝ (அவன்தான்) மனிதர்களின் அரசன். إِلَـٰهِ ٱلنَّاسِ ۝ (அவனே) மனிதர்களின் (வணக்கத்திற்குரிய) நாயன். مِن شَرِّ ٱلۡوَسۡوَاسِ ٱلۡخَنَّاسِ ۝ பின்னால் பதுங்கியிருந்து வீண் சந்தேகங்களைக் கிளப்பக் கூடியவ(னான ஷைத்தா)னின் தீங்கைவிட்டும் (நான் பாதுகாவல் தேடுகிறேன்) ٱلَّذِی یُوَسۡوِسُ فِی صُدُورِ ٱلنَّاسِ ۝ அவன் எத்தகையவனென்றால், மனிதர்களின் இதயங்களில் வீண் சந்தேகங்களைக் கிளப்பிவிடுகிறான். مِنَ ٱلۡجِنَّةِ وَٱلنَّاسِ۝ (இத்தகையோர்) ஜின்களில் மற்றும் மனிதர்களில் இருக்கின்றனர். [காலையிலும், மாலையிலும் ஸூரத்துல் இஃக்லாஸ், ஸூரத்துல் ஃபலக், ஸூரத்துந் நாஸ் மூன்று முறை] நன்மைகள்: எல்லாத்தீங்குகளில் இருந்தும் இது உங்களுக்கு போதுமான பாதுகாப்பாக இருக்கும். ஆதாரம்: ‘அப்துல்லாஹ் இப்னு குபைப் رضي الله عنه அவர்களின் ஹதீஸ். இமாம் அபூ-தாவூத் மற்றும் இமாம் அஹ்மத் அவர்கள் அறிவிக்கின்றார்கள். ______________ துஆ: 07 عن عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبْزَى، قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَصْبَحَ، قَالَ: ” أَصْبَحْنَا عَلَى فِطْرَةِ الْإِسْلَامِ، وَعَلَى كَلِمَةِ الْإِخْلَاصِ، وَعَلَى دِينِ نَبِيِّنَا مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَعَلَى مِلَّةِ أَبِينَا إِبْرَاهِيمَ حَنِيفًا مُسْلِمًا، وَمَا كَانَ مِنَ الْمُشْرِكِينَ. أخرجه أحمد (٢٤/٧٧) وإسناده صحيح. _________________________________ أَصْبَحْنَا عَلَى فِطْرَةِ الْإِسْلَامِ، وَعَلَى كَلِمَةِ الْإِخْلَاصِ، وَعَلَى دِينِ نَبِيِّنَا مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَعَلَى مِلَّةِ أَبِينَا إِبْرَاهِيمَ حَنِيفًا مُسْلِمًا، وَمَا كَانَ مِنَ الْمُشْرِكِينَ அஸ்பஹ்னா அலா பித்ரதில் இஸ்லாமி; வஅலா கலிமதில் இக்லாசி; வஅலா தீனி நபிய்யினா முஹம்மதின் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்;வஅலா மில்லதி அபீனா இப்ராஹீம ஹனீபன் முஸ்லிமவ்; வமாகான மினல் முஷ்ரிகீன். பொருள்: இஸ்லாமின் இயற்கை மீதும், கலப்பற்ற தூய்மையான வசனத்தின் மீதும், எங்கள் நபி முஹம்மத் ﷺ அவர்களது மார்க்கத்தின் மீதும், எங்கள் தந்தை இப்ராஹீமின் வழிமுறையின் மீதும், காலைப் பொழுதை அடைந்தோம். அவர் இணை வைப்பதை விட்டு விலகியவர்; அல்லாஹ்விற்குப் பணிந்தவர்; அவர் இணை வைப்பவர்களில் உள்ளவர் அல்லர். [காலையில் ஒரு முறை] ஆதாரம்: அப்துர்-ரஹ்மான் இப்ன் அப்ஸா رضي الله عنه அவர்களின் ஹதீஸ். இமாம் அஹ்மத் அவர்கள் அறிவிக்கின்றார்கள். ________________ துஆ: 08 عن عَبْدِ اللَّهِ بن مسعود رضي الله عنه قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَصْبَحَ قَالَ: «أَصْبَحْنَا عَلَى فِطْرَةِ الْإِسْلَامِ، وَكَلِمَةِ الْإِخْلَاصِ، وَمِلَّةِ أَبِينَا إِبْرَاهِيمَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ» ، وَإِذَا أَمْسَى قَالَ مِثْلَ ذَلِكَ.  أخرجه البزار في مسنده (١٩١١) بإسناد صحيح _________________________________ أَصْبَحْنَا عَلَى فِطْرَةِ الْإِسْلَامِ، وَكَلِمَةِ الْإِخْلَاصِ، وَمِلَّةِ أَبِينَا إِبْرَاهِيمَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ அஸ்பஹ்னா அலா பித்ரதில் இஸ்லாமி; வ கலிமதில் இக்லாசி; வ மில்லதி அபீனா இப்ராஹீம; முக்லிஸீன; லஹுத்தீன். பொருள்: இஸ்லாமின் இயற்கை மீதும், கலப்பற்ற தூய்மையான வசனத்தின் மீதும்; எங்கள் தந்தை இப்ராஹீமின் நேர்மையான வழிமுறையின் மீதும், , காலைப் பொழுதை அடைந்தோம். [காலை மற்றும் மாலை ஒரு முறை] [ஆனால் மாலையில் கீழ்க்காணும் முறையில் கூறவேண்டும்.] أَمْسَيْنَا عَلَى فِطْرَةِ الْإِسْلَامِ، وَكَلِمَةِ الْإِخْلَاصِ، وَمِلَّةِ أَبِينَا إِبْرَاهِيمَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ அம்ஸைனா அலா பித்ரதில் இஸ்லாமி; வ கலிமதில் இக்லாசி; வ மில்லதி அபீனா இப்ராஹீம; முக்லிஸீன; லஹுத்தீன். பொருள்: இஸ்லாமின் இயற்கை மீதும், கலப்பற்ற தூய்மையான வசனத்தின் மீதும்; எங்கள் தந்தை இப்ராஹீமின் நேர்மையான வழிமுறையின் மீதும், , மாலைப் பொழுதை அடைந்தோம். ஆதாரம்: அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் رضي الله عنه அவர்கள் அறிவிக்கின்றார்கள். சரியான அறிவிப்பாளர் தொடருடன் பஸ்ஸார் அவரது முஸ்னதில் அறிவிக்கின்றார். இன்ஷா அல்லாஹ் தொடரும்… -ஸலஃபி தமிழ் இணையதளம் முந்தைய தொடரை வாசிக்க
மூலம்: https://islamqatamil.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%af%88-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b2%e0%af%88-%e0%ae%a4%e0%af%81%e0%ae%86%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%b0-2/
← ஃபத்வா பட்டியலுக்கு திரும்பு