ரமழான் நோன்பு குறித்த கேள்விகளும் – பதில்களும்

📅 2023-03-26✍ Aasif
நோன்பு
🗂 நோன்பு
بسم اللــــه الرحمـــــــــن الرحيم ரமழான் நோன்பு குறித்த கேள்விகளும் – பதில்களும் கேள்வி 1️⃣5️⃣ : திரவ வடிவில் காணப்படும் சொட்டு மருந்துகளை (Ear Drops, Eye Drops,…) பயன்படுத்துவதன் மார்க்கச் சட்டம் என்ன.? 📝 பதில் : இது விடயத்தில் காணப்படும் கருத்துவேறுபாடுகளை விட்டும் நாம் தவிர்ந்துகொள்ளும் பொருட்டு, நான் கூறுவது என்னவெனில் (நோயாளியாக) இருக்கும் ஒருவர் தமது நோன்பை விடட்டும். அல்லாஹு தஆலா கூறுவதாவது : وَمَنْ كَانَ مَرِيضًا أَوْ عَلَى سَفَرٍ فَعِدَّةٌ مِنْ أَيَّامٍ أُخَرَ “… உங்களில் யாரேனும் நோயாளியாகவோ, அல்லது பயணியாகவோ இருந்தால் (அவர் நோன்பு நோற்க வேண்டியதில்லை. அதை ரமழான் அல்லாத) மற்ற நாள்களில் கணக்கி(ட்டு நோற்றுவி)டவும்….” (அல்குர்ஆன் 2:184) எவனே, ஒருவர் நோய்வாய்ப்பட்டு மருந்து மாத்திரைகளின்பால் தேவையுள்ளவராக காணப்பட்டால், அவர் தம்முடைய நோன்பை விட்டுவிட்டு அதனை வேறு நாட்களில் திரும்ப நோற்குமாறு நான் அறிவுறுத்துகிறேன். ஆனால், (நோய்வாய்ப்பட்ட சமயத்திலும்) ஒருவர் தம் நோன்பை விட வில்லையானால், அவர் எடுக்கும் திரவ மருந்துகள் தம் தொண்டையை அடையாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். (அவ்வாறு அடைந்தால் நோன்பு முறிந்துவிடும்). 📝 மூல நூல் : ஃபதாவா ரமழான்; இமாம் முக்பில் பின் ஹாதீ அல்-வாதியீ (ரஹிமஹுல்லாஹ்)
மூலம்: https://islamqatamil.com/%e0%ae%b0%e0%ae%ae%e0%ae%b4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%af%8b%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%95%e0%af%87-9/
← ஃபத்வா பட்டியலுக்கு திரும்பு